ஒரே ஓவரில் ‘ஹாட்ரிக் சிக்ஸ்’ அடித்து விலாசிய தல தோனி… ரசிகர்களின் குரலால் அதிர்ந்த மும்பை மைதானம்!

நேற்று மும்பையில் வான்காடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் மேட்சில் ருத்ராஜ் தலைமையிலான சி எஸ் கே அணி மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஆகியவை மோதின. நேற்று நடந்த ஆட்டத்தை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் கண்களுக்கு பெரும் விருந்தாகவே அமைந்தது என்றே சொல்லலாம்.

அதற்குக் காரணம் கடைசியாக ஒரு ஓவர் இருக்கும் பொழுது தல தோனி ஆட்டத்தில் விளையாடி அனைவரையும் குதூகல படுத்தினார். முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பௌலங்கை தேர்ந்தெடுத்தது.20 ஓவர் முடிவில் 206 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவரில் களம் இறங்கியதுமே மைதானம் முழுவதும் அதிர்ந்தது. ஹர்திக் பாண்டியா முதல் பந்தை வீசியதும் போர் விலாசினார். மைதானம் எங்கும் ஏற்பட்ட கூச்சல் ஓயாத நேரத்தில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை திக்கு முக்காட செய்தார்.

ஆக கடைசியாக ஒரு ஓவரில் மட்டும் 24 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்தார்.45 வயதிலும் எப்படி இவ்வாறு ஆட முடியும் என அனைவரும் ஆச்சரியமாய் பார்க்கும் அளவிற்கு ஆட்டத்தை முடித்துவிட்டு சுறுசுறுப்பாக திரும்பினார்.

செல்லும் வழியில் ரசிகை ஒருவருக்கு மூன்று சிக்ஸர்கள் விலாசிய பந்தை அவர் கேட்டதால் பரிசாக கொடுத்துவிட்டு கிளம்பினார். இரண்டாவது பேட்டிங் செய்த மும்பை அணியால் சிஎஸ்கே வின் ரண்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

பதிரனா அட்டகாசமாக மூன்று விக்கெட்டுகளை தூக்கி பலம் சேர்த்தார். ரோகித் சர்மா 100 ரன்கள் குவித்த போதிலும் சரியான பாட்னர் கிடைக்காத காரணத்தினால் ரண்களை குவிக்க முடியவில்லை. கடைசியாக, சி எஸ் கே அணி மும்பை மண்ணில் அபார வெற்றி பெற்றது.